சண்டிராணி / வான்மீதிலே இன்பத் தேன் மாரி பெய்யுதே
எம்.எஸ்.வி. அவர்கள் .. அன்றைய பிரபலமான இசை இயக்குனர் C .R . சுப்புராமன் அவர்களிடம் உதவியாளராக இருந்தவர் . தானே அவரைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார் . இடையில் படம் ஒன்று இந்த இயக்குனர் மறைந்ததால் விஸ்வநாதன் ஐயாவை வைத்தே இசையமைப்பு பூர்த்தி செய்யப்பட்டது . அதற்கு முன்பாகவே T .K . ராமமூர்த்தி அவர்கள் வயலின் இசை வித்தகராக அவருக்கு உதவிகரமாக இருந்து வந்துள்ளார் . இது சமயம் தான் " ஸ்ரீதர்" ?? இயக்குனர் என்று நினைக்கிறன் .. M.S .V . அவர்களையும் T .K .R . அவர்களையும் இணைத்து , சேர்ந்து இசையமைத்தால் நன்றாக வரும் என ...இந்த இரட்டையர்கள் உருவாயினர் என்பது வரலாறு . அந்த இணைவே பின்னால் தமிழ்த் திரையில் முதல் சகாப்தம் ஏற்பட காரண மாயிற்று .
சரி, இந்தப் பாடல் , எனக்கு எப்போதும்போல் இலங்கை வானொலி மூலமாகவே அறிமுகம் . சொல்லப் போனால் இது நான் பிறந்த வருடம் . அந்த ரசனை மனதில் இன்னும் அப்படியேதான் . திரைக்கதை தெரியாது . காணொளியில் N .T .R . , பானுமதி அம்மா வருகிறார்கள் . பாடியது பானுமதியம்மாவும் , கண்டசாலாவும் . அன்று பெரும்பாலான திரைப்படங்கள் தெலுங்கு தமிழ் இரண்டிலுமே எடுக்கப்படும் . இன்றைக்கும் இந்த இரு மொழி படத்திற்கு ஒத்துப் போகும் ரசிகர்கள் அதிகம் .
"வான் மீதிலே"
சண்டி ராணி (1953)
பாடல் : கே.டி. சந்தானம்
இசை : சி.ஆர். சுப்புராமன், எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்கள் : கண்டசாலா, பானுமதி...
நன்றி ...Vembar Manivannan
வான் மீதிலே இன்பத்
தேன் மாரி பெய்யுதே
வான் மீதிலே இன்பத் தேன் மாரி பெய்யுதே
வண்ணம் சேர்க்கலாம் மதி
பேசும் வெண்ணிலாவிலே
. வான் மீதிலே இன்பத்
தேன் மாரி பெய்யுதே
........
வசந்தத்தில் ஆடும் உயர்செல்வம் நீயே .
மையம் கொண்டு ஆடும் தமிழ்த் தென்றல் நானே .. "
"மனம் ஒன்று சேர்ந்தே உறவாடும்போது .."
எனக் கண்ட சாலா அவர்கள் பாடுவது மட்டும் நல்ல தமிழ் வரிகளாகவும் ,
பானுமதியம்மா அவர்களின் இளமைத் தோற்றம் ..பாடும் வரிகள் தமிழென தெலுங்கு வாடை தட்டியே வரும் . ஆக அன்று எங்களுக்கு அன்று பொருள் பெரிதான வித்தியாசத்தில் இருக்காது . புரிந்து கொள்ளலாம் . பாடல் ராகம் , பாவம் நம்மை ஈர்த்துள்ளது என்பது ஒரு கணக்கிற்கு அல்ல , என் மனம் ரசித்த உண்மை .
பின்னாளில் M . S .V . அவர்களே இந்த மெட்டமைத்தது எனக் கேள்விப்பட்டுள்ளேன் .
என் மனத்தைத் தாலாட்டும் பதிவுகள் .. இன்னும் வருடங்கள் குறியீட்டில் தொடரும்.
This film was also made in Hindi. Bhanumathi sang the hindi version too (Chanda tale), but alongside Talat Mehmood, known as the Ghazal King! The song is equally melodious. What is more important to know is that MSV composed the first few (opening) lines of the hindi version and was later on extended by the lyricist, and all this without knowing the meaning of the words he had uttered! As MSV recounts, even Bhanumati was surprised to see the lyricist nod his head in appreciation! This version is more melodious as it was sung by the great Talat. Another interesting point is that the kind of words MSV used in the opening of this song can be seen to be used in many future songs too, with similar pattern (kahaniyaan, javaniyaan....)
Lovely tune by our Master!
Coming together of MS V- TK R AS COMPOSERS was completed formally by NS Krishnan through his movie "PANAM". I call it 'formally ' because the two had already worked for completion of all remaining songs and BGM for "Devadas" being done by CR SUBBURAMAN, WHO HAD AN UNTIMELY DEMISE during the making of Devadas. Sridhar's prominence on the horizon came about after a couple years of V-R's association. Thanks for the opportunity. Regards K.Raman Madurai.
Dear sai
Nice to see your post after many years .Hope you are doing fine Hope to see you more often here
Dear Madam
here goes the video with the song in all 3 languages and with Mellisaimannar's comments